8வது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் எழுச்சிப் போராட்டம்!

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று ( சனிக்கிழமை ) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப்பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைதது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று போராட்டம் களத்துக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வருகை தந்ததோடு ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் வந்திருந்தமை குறிப்பிடதக்கது .