பல்கலைக்கழக மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உள்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டுள்ளது. இணுவில் மேற்கைச் சேர்ந்த சிவகரநாதன் திவாகரி (வயது – 23) என்ற சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.காய்ச்சல் காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் அவர் நேற்று (திங்கட்கிழமை) காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.