அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது.‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகின்ற இந்த பேரணி, 5 நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளது.அதற்கமைய இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகும் பேரணி மாவனெல்ல வரையில் பணயிக்கவுள்ளதுடன், நாளை மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் 28ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் பயணிக்கவுள்ளது.தொடர்ந்து, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும்  30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பயணிக்கும் பேரணி, கொழும்பில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.