சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினர்!

ஐக்கிய தேசியக் கட்சியினர் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.கொழும்பு ஹைட் பார்கில் இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என ஐ.தே.கவின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.“நாட்டை மீட்டெடுப்போம்“ எனும் தொனிப்பொருளின்கீழ் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.