37 கோடி பெறுமதியுடைய மாணிக்கக்கல்லுடன் பௌத்த தேரர் உள்ளிட்ட இருவர் கைது

இராணுவப் புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு முயற்சித்த இரு நீல மாணிக்கக் கற்கள் கொஸ்லந்த பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாணிக்கக் கற்கள் 37 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவிருந்ததோடு, இது தொடர்பில் வெலிவேறிய பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த தேரரொருவர் உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மாணிக்கக் கற்கள் விகாரை வடிவிலானது என்பதோடு, அது தொல்பொருள் அழிப்பின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகள் கொஸ்லந்த பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.