மன்னாரில் வாள்வெட்டில் இருவர் பலி-நால்வர் காயம்!

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று(10) காலை மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.இதன்போது உயிரிழந்த இருவரும் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.அத்துடன், படுகாயமடைந்த நால்வர் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இந்தநிலையில் இதுதொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.