கோட்டாபயவை கடுமையாக விமர்சிக்கும் இரு முன்னாள் அமைச்சர்கள்

அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் கிடைக்காத முன்னாள் அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும் முந்தைய அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர்களாக இருந்தவராவர். இவர்கள் அனுராதபுரம் மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

அந்த மாவட்டங்களில் அவர்களை விடவும் பிரபலத்தன்மை மற்றும் வயதில் குறைத்தர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவதால், அவர்கள் விரக்தியிலும் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

அமைச்சுப் பதவிகள் கிடைக்காத காரணத்தினால் பல இடங்களில் பகிரங்கமாக ஜனாதிபதியை குறிவைத்து விமர்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.