இருவர் கட்சியில் இருந்து நீக்கம்!! - சுகந்திரக் கட்சி அதிரடி

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளது.

இன்று இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.