இரண்டு பேருந்துகள் மோதி விபத்து-ஒருவர் பலி!

திக்வெல்ல – பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.