சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இரு சிறுவர்கள் பலி!

அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக மின்சார வேலி அமைத்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை சம்மாந்துறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த இருவரும் 13 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விறகு பொறுக்குவதற்காக சென்ற நிலையில் மின்சாரவேலியைல் சிக்குண்டு சம்பவ இடத்தில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.யானைகள் வராமல் இருக்க அமைக்கப்பட்ட மின் வேலியில் அவர்கள் சிக்கிக் கொண்டதாக நம்பப்படுகிற நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.