இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு!

பல மில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2009 முதல் 2016 வரை செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்காக இவ்வாறு இலஞ்சம் வழங்கப்பட்டதாக இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் இருவரும் 67 மற்றும் 71 வயதுடைய பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.