ஆழிப்பேரலையின் கோரதாண்டவத்தின் ரணம் நிறைந்த கண்ணீர் அஞ்சலி!

இலங்கையில், இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக வடமராட்சி கிழக்கு உடுத்துறை நினைவாலயத்தில் நடைபெற்றது.

இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில், உயிரிழந்தவர்களின் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டது. உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படைத்து அஞ்சலித்தனர்.

கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிரம் பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.