ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தொலைபேசியில் வினவியபோது,
கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், போக்குரத்து நெரிசல் ஏற்படும் என்ற காரணத்தினால் இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த சந்திப்பானது எதிர்வரும் 25 ஆம் திகதி காலையில் இடம்பெறும் என ஜனாதிபதி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.