நாட்டில் இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!

நாட்டில் இன்றைய  தினம் (திங்கட்கிழமை) மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபையினால் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று  E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.மேலும், P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு  காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.