வவுனியாவில் முச்சக்கர வண்டி,மோட்டர் சைக்கிள் மோதி விபத்து!

வவுனியாவில் முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டர் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று (25) மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,வவுனியா, புகையிரத நிலைய வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக மாணவி ஒருவரை இறக்கி விட்டு வவுனியா நகரை நோக்கி செல்வதற்காக வீதியின் குறுக்கே முச்சக்கர வண்டி ஒன்று திரும்ப முற்பட்ட போது குருமன்காடு பகுதியில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி என இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த இருவரும் நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.