கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம் - தேடுதல் பணி தீவிரம்!


மாத்தறை - வெல்லமடம கடற்பகுதியில் குளிக்கச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

குறித்த மாணவர்களை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக மாத்தறை பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் தேடுதல் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.