4 மற்றும் 5ம் திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டு!

ஜூலை 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரம் 40 நிமிடம் மின்சாரம் தடைப்படும் அதேவேளை இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும்.

மேலும், சிசி பகுதியில் காலை 6 மணி முதல் 8.30 மணிக்குள் 2 மணி நேரம் MNOXYZ பகுதிகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரைக்குள் மூன்று மணி நேரம் மின்சாரம் தடைபடும்.