வீடுடைத்து கவரிங் நகைகளை திருடிச் சென்ற திருடர்கள்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கலவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருட்டு சமபவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி, வீட்டில் இருந்த கவரிங் நகைகளை திருடர்கள் களவாடி சென்றுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த ஒரு தொகை கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதனித்து உள்ளே சென்று பார்த்த போது , தமது கவரிங் நகைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளமையை அறிந்துள்ளனர்.

இந்நிலையில், வீடு உடைக்கப்பட்டமை தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் அவர்கள் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.