சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை-பந்துல குணவர்தன!

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும் செய்திகள் கட்டுக்கதை என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்று புதன்கிழமை புறக்கோட்டையில் உள்ள அரிசி களஞ்சியசாலைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை கூறினார்.நாட்டிற்கு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகம் செய்து வருவதாகவும் அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.இதேவேளை துறைமுகத்தில் இருந்து மேலும் ஒரு பெரிய அரிசி கையிருப்பில் இருந்து விடுவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.