இராவணன் - தமிழரா ? சிவ வழிபாட்டில் ஈடுபட்டாரா ? இலங்கையில் இராவணனும் இல்லை, சிவ வழிபாடும் இல்லை! வெளியாகிய புதிய சர்ச்சை

இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை, சிவ வழிபாடும் இல்லை என முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

திருக்கோணேச்சர ஆலயம் தொடர்பில் தவறான வரலாற்று பின்னணி காணப்படுகிறது எனவும் திருகோணலை மாவட்டத்தில் நான்கு தூபிகள் இருந்துள்ளன, அவை கடலை நோக்கியதாக அமைந்திருந்ததால் திருக்கோணேச்சரம் என பெயர் பெற்றுள்ளது என்றும் மகா வம்சத்திலும் இவ்விடயம் குறிப்பிடப்படுகிறது, எமக்கும் வரலாறு தெரியும் நாமும் வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இராவணன் திருக்கோணேச்சர ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் இராவணன் என்ற மன்னன் இருந்தாரா ? அவர் தமிழரா ? சிவ வழிபாட்டில் ஈடுபட்டாரா ? என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும், திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ள பகுதியில் 300 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகின்றது.

இதில் 18 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே கோவிலுக்கு சொந்தமானது. ஆலயத்துக்கு செல்லும் பாதையில் சுமார் 60 கடைகள் உள்ளன.

இந்த கடைகளை சிங்களவர் வைத்திருப்பதால் கூட்டமைப்பினர் அதற்கு எதிராக இனவாதம் தெரிவிக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டினர்.

திருக்கோணேச்சர ஆலயத்தின் வீதி இருமருங்கிலும் உள்ள கடைகளை புதுப்பிக்க ஆலயத்தின் நிர்வாக சபையினர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள், 

கடைகளைச் சிங்களவர்களுக்குக் கொடுப்பதற்கு ஆலய பரிபாலன சபையே விரும்பும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பது அவர்களின் அரசியல் ஆதாயத்துக்கே எனவும் கூறியுள்ளார்.