இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் என தகவல்



நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்றிலிருந்து (20) இந்த நிலைமை ஏற்படலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடுமென அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

 எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரி. இதனால் அதற்குரிய வற் தவணைகள் இன்று முதல் செலுத்தப்பட வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்தார்.