பிரபல தனியார் நிறுவனத்தில் இரு பெண்கள் மர்மமாக உயிரிழந்தமையால் பெரும் பரபரப்பு


பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலுபோமுல்லவைச் சேர்ந்த 28 வயதான திலினி சொய்சா மற்றும்  வாதுவையைச் சேர்ந்த 19 வயதான மலிஷா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்தோடு அவர்களின் இறுதிகிரியைகள் நேற்று இடம்பெற்றன.
 

திலினியின் மரணத்திற்குக் காரணம் அவரது உடலின் முக்கிய இரத்த நாளத்தில் உருவான த்ரோம்பஸ் எனப்படும் இரத்த உறைவு எனவும் இது இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அதிகப்படியான சோர்வு, மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் இதுபோன்ற நிலைமைகள் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்பதற்கு முன்பு உணவை உட்கொண்ட பிறகு அவர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாணந்துறை பொது சுகாதார ஆய்வாளர், அவர்கள் உண்ணட உணவு மாதிரிகளை எடுத்து, இரண்டு ஊழியர்களின் திடீர் மரணம் தொடர்பாக நேற்று முன்தினம் களுத்துறை தேசிய சுகாதார நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார்.

எனினும் நிறுவனத்தின் மூன்று ஊழியர்கள் நேற்று முன்தினம் நோய்வாய்ப்பட்டு பாணந்துறை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.