யாழ்ப்பாணத்தில் மதுபோதையுடன் உந்துருளியில் வந்த இளைஞர் ஒருவர், இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் காயங்களுக்குள்ளான பெண், யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(22) அதிகாலை யாழ். கொட்டடியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் களஞ்சியசாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகரை நோக்கி உந்துருளியில் பயணித்த குறித்த இளைஞர், யாழ். கொட்டடியில் அமைந்துள்ள கடை ஒன்றுக்கு துவிச்சக்கவண்டியில் சென்ற இளம் குடும்பப் பெண் மீது மோதிவிட்டு தப்பியோடியுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய இளைஞன் மது போதையிலிருந்துள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.