கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறையும்!

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா இந்த வாரத்தில் இருந்து தொடர்ந்தும் நாட்டிற்கு கிடைக்கும்.கொழும்பு துறைமுகத்தில் ஏற்கனவே 100 கொள்கலன் கோதுமை மாவுகள் இறக்கப்பட்டுள்ளன.டுபாய் மற்றும் துருக்கியில் இருந்து இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் கப்பல்கள் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கோதுமை மாவின் விலை வேகமாக அதிகரித்துள்ளது” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.