திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பில் உள்ள இலங்கையின் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது பல இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.அதன்படி தர்ஸ்டன் கல்லூரிப் பக்கத்திலிருந்தும் கிரீன் பாத் பக்கத்திலிருந்தும் பிளோவர் வீதியின் அனைத்து நுழைவாயில்களிலும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவ்வழி ஊடக யாரும் வெளியே செல்லவோ, அப்பகுதிக்குள் செல்லவோ எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது