திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

திருடப்பட்ட முச்சக்கர வண்டியினை விற்பனைக்கு எடுத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயாகல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவில் சாரதியாக கடமையாற்றியவர் என களுத்துறை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது ​​பெற்ற சம்பளம் கடனை அடைப்பதற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த திருட்டினை செய்ய தூண்டியதாக தெரித்துள்ளார்.