தொல்லியல் பெறுமதிமிக்க தங்க சிலையை விற்க முயன்ற நபர்

தொல்லியல் பெறுமதியான தங்கத்தில் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிலையை ஒன்றை விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் வவுனியா முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி வருண ஜயசுந்தரவின் உத்தரவின் பேரில் வவுனியா முகாமின் கட்டளை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.பி.என் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் கொரகொட மேகொடவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை சோதனையிட்டு இந்த சிலையை கைப்பற்றியுள்ளனர்.

சிலையை தவிர அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்த 12 ரக ஒற்றைக்குழல் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்களையும் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்து மொரகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.