நாட்டில் பைஸர் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளது!

நாட்டில் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்று மாத்திரம் 130644 பேருக்கு, பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4006720 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை நேற்றைய தினம் 922 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1368 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.அதேநேரம் 596 பேருக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 1673 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளன.