இந்த வருடத்தில் மாத்திரம் 9 ஆயிரத்தை தாண்டிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 9809ஆக அதிகரித்துள்ளது.40 முதல் 45 வீதமான கழிவுப்பொருட்கள் டெங்கு பரவுவதற்கு பங்களிப்பதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் அனோஜா வீரசிங்க தெரிவித்தார்.கட்டுமானத் தளங்கள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் டெங்கு பரவுவதற்கான அதிக ஆபத்துள்ள இடங்களாகக் கருதப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.