வவுனியாவில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது.இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன் சில வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.இதேவேளை வவுனியாவில் ஒரு சில நாட்களாக மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.