காவல்துறையினரின் துப்பாக்கி சூடு குறி தவறியதில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்

மீரிகம, தங்ஹோவிட்ட பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகம் குறி தவறியதில் அனுராபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் நேற்றைய தினம் கொல்லப்பட்டார்.

பெந்தொட ஹம்புருகல பகுதியைச் சேர்ந்த ஷாமிலி என்ற 29 வயதுடைய பெண் அவ்வாறு கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அத்துடன் , இந்துருவவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரிந்து வரும் அவர், இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் சுற்றுலா நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தங்ஹோவிட்ட பிரதேசத்தில் உள்ள மதுபானசாலைக்கு மகிழுந்தொன்றில் பிரவேசித்த சிலர், அங்கு கொள்ளையிட்டு தப்பியோட முயன்றுள்ளனர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தங்கொவிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.