நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது-பந்துல குணவர்தன!

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மக்கள் பட்டினி கிடக்காமல் இருப்பதற்கான பொறுப்பை அமைச்சர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதால், இந்த நாட்டில் உள்ள மக்களை பட்டினி கிடக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.