எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்!

எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இது தொடர்பான சூத்திரம் ஏற்கனவே வரையப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.கடந்த அரசாங்கம் கொண்டு வந்த எரிபொருள் விலை சூத்திரத்தை தற்போதைய அரசாங்கம் நீக்கி புதிய சூத்திரத்தை தயாரித்துள்ளது.