தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பை விடுத்துள்ள தேர்தல் ஆணைக்குழு!


உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நேரத்திற்கு வாக்குச்சீட்டுகள் கிடைக்காமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.