இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது-ஜனாதிபதி!

சுமார் இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதேவேளை நாட்டில் அபிவிருத்தி பணிகள் தொடர்கின்றன என்றும் தெரிவித்தார்.ஜனாதிபதி விரும்பிய இலக்குகளை அடைவதற்குத் தேவையான பலத்தை வழங்க தயார் என பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.முழு உலகமும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வேளையில் இலங்கை திட்டமிட்டு முன்னேறி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.