கொலையில் முடிந்த தகராறு..! பரிதாபமாக உயிரிழந்த பெண்


மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்குடா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பட்டியடிச்சேனை பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார்.

இதன் போது பலத்த காயமடைந்த குறித்த பெண் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மேலிதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.