நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என தொல்பொருள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
தற்போது, அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை தற்சமயத்திற்குப் பாதுகாத்துக் கொள்வதற்காக அதற்கு கம்பிகள் நடப்பட்டுள்ளன.
இதனால் மக்களின் பாதுகாப்புக் கருதி மந்திரி மனைக்குள் யாரையும் நுழைய வேண்டாம் என்று தொல்பொருள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.