புத்தாண்டில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற கொடூரம் - கிராமமே சோகத்தில்!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ​

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் சுரேஷ் என்ற 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

புத்தாண்டு தினமான நேற்று காலை விநாயகபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ​

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை பிரதேசவாசிகள் இணைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த போதும், ​​சிகிச்சை பலனின்றி இளைஞன் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர். ​

அதனையடுத்து தாக்குதலை நடத்தியவர்களைக் கண்டறியும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ​

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ​சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.