இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்பு

மிரிஹானை ஜுபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

80 வயதுடைய ஆண் ஒருவரும், 96 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதோடு அவர்கள் இருவரும் தம்பதிகள் என குறிப்பிடப்படுகின்றது.

வயோதிபர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது இயற்கை மரணமா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்