இலங்கையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் பண்டிகை


தமிழர்களின் திருநாளான தைதிருநாள், உலக வாழ் தமிழர்களால் இன்று வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் எமது இணையத்தள நேயர்களுக்கு அன்பான தைதிருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றோம்.

இதேநேரம் சீரற்ற காலநிலைக்கும் மத்தியில் உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கோவில்களிலும், தேவாலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல்பொங்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதேநேரம் நாட்டு மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாக தூய்மை இலங்கை திட்டம் தொடங்கப்பட்டுள்ள நேரத்தில், தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தைப்பொங்கல் பண்டிகையானது ஒரு உண்மையான கலாச்சார கொண்டாட்டம் என்பதைக் காட்டுவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
 
ஆரம்ப கட்டம் முதல் அறுவடை வரை விவசாய நடவடிக்கைகளுக்கு இயற்கையின் மூலம் சூரிய பகவானிடமிருந்து பெறப்பட்ட ஆற்றலுக்கு நன்றி தெரிவிப்பதே இந்த விழாவின் நோக்கம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஒரு நாட்டின் மக்களுக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆளும் கட்சிக்கு, பொதுமக்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது, அந்த அதிகாரத்தை வழங்கிய மக்களுக்கு செலுத்தப்படும் நன்றி மற்றும் பொறுப்புணர்வின் வெளிப்பாடாகும் என்பதை தைப்பொங்கல் விழாவின் உட்பொருளை சரியாக புரிந்துகொள்வதன் மூலம் உணரலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது  தைப் பொங்கல்  வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.