ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால் பதற்றநிலை!

ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தினால் இன்று (புதன்கிழமை) விஹார மஹாதேவி பூங்காவுக்கு அருகில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.