ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்!

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று கொழும்பு, கோட்டையில் HND மாணவர்களின் எதிர்ப்பு பேரணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.