நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் ஆசிரியர்கள் மாணவர்கள் காயம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியில் குளவி கொட்டியதில் 08 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.காயமடைந்தவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாடசாலை மைதானத்தில்  இன்று (வெள்ளிக்கிழமை)  மாணவர்கள் ஆசிரியர்கள் இருந்தவேளை குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகள் மாணவர்கள் ஆசிரியர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.