தமிழக உள்ளூராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு!

தமிழக நகர் புற உள்ளூராட்சி தேர்தலை ஒட்டி நடைபெற்ற பிரசார நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவுப்பெற்றன.இதனையடுத்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1824 வாடர்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7411 வார்டுகளிலும், நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுதேர்தலின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒரு இலட்சம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.தமிழக பொலிஸாருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.