தமிழ்நாடா - தமிழகமா..! பெரும் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்


இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பாரதத்தின் பகுதியை தமிழ்நாடு என அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என அழைப்பதே சரியென தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் தெரிவித்த கருத்து பெரும் சர்சையாகியுள்ளது.

இந்நிலையில் அவரது இந்தக்கருத்துக்கு தமிழக தேசிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஆளுநரின் இந்தக் கருத்தைக் கண்டித்துள்ள திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு தமிழ்நாட்டில் பிரிவினையையும், குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் தினசரி ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மதிமுகவில் இருந்து வைகோவும் கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.