யாழ் சுழிபுரத்தில் வீடொன்றில் வாளுடன் புகுந்த கும்பல் கொள்ளை!

யாழ்.வட்டுக்கோட்டை – சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.நள்ளிரவில் வாளுடன் வீட்டுக்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி ஒரு பவுண் சங்கிலி, அரைப்பவுண் தோடு, அரைப்பவுண் மோதிரம் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முறைப்பாட்டிற்கமைய வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.