பசில் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் இடைநிறுத்தம்!

பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் முன்வைத்த இரண்டு பிரேரணைகள் நிதி அமைச்சினால் இடைநிறுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த யோசனைகளை இடைநிறுத்துவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது .அந்த வகையில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான முன்மொழிவு. 4,917 உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு தலா 4 மில்லியன் ரூபாய். மொத்தம் 19.67 பில்லியன் என்பது இடைநிறுத்தப்படுவதோடு கிராமப்புற சமூக மேம்பாட்டுக்கான 85 பில்லியன் நிதியும் நிறுத்தப்பட்டுள்ளது .இதேவேளை பெரும் சுமையாகக் காணப்படும் உள்ளுராட்சி நிறுவனங்கள் உட்பட நாட்டின் பொதுத்துறை செலவினக் குறைப்புகளை மீளாய்வு செய்வதற்கு நிதி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது .