சமஷ்டி குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை(sajith premadasa) ஆதரித்ததன்மூலம் இலங்கை தமிழரசு கட்சி(itak) பிழையான முடிவை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்(sritharan) குற்றம்சாட்டியுள்ளார்.
லண்டன்(london) சென்றிருந்த அவர் நாடு திரும்பிய நிலையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனப்பிரச்சினைக்கான தீர்வாக எந்த வேட்பாளர் சமஷ்டி குறித்து உத்தரவாதம் அளிக்கிறாரோ அவரையே ஆதரிப்பதென முடிவு எடுக்கப்பட்டிருந்தது.
அப்படியென்றால் சஜித் பிரேமதாசவிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கிய நிலையில் அவர் அளித்த உத்தரவாதம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென கட்சி முடிவெடுத்ததாக தெரிவிக்கப்பட்டபோதிலும் உரிய முறையில் கலந்துரையாடி அந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான பின்னணியில் தமிழ் பொதுவேட்பாளருக்கு தனது ஆதரவில் எவ்வித மாற்றமும் இல்லை என சிறிதரன் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்த எவ்வித உத்தரவாதமுமின்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதென தமிழரசுக்கட்சி பிழையான முடிவை எடுத்துச் செயற்படும் பின்னணியில், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பது என்ற சரியான தீர்மானத்தின் வழியில் பயணிப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.