நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது.மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வத்தளை, கல்கிசை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே உள்ளிட்ட சில பகுதிகளிலேயே இவ்வாறு மின் தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இன்றைய தினம் நாட்டின் எந்த பகுதியிலும் மின் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.