நாட்டின் பல பாகங்களில் திடீர் மின்தடை!

நாட்டின் பல பாகங்களில் தற்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் முதல் செயலிழந்திருந்த நிலையில், சீர்செய்யப்பட்டு, நேற்றைய தினம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக குறித்த மின் பிறப்பாக்கி இன்று மீண்டும் செயலிழந்துள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.